சில்லுன்னு ஒரு காதல்

ஜோதிகாவும் சூர்யாவும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஜில்லுன்னு ஆசையாக குந்தவியாக நடிக்கும் ஜோதிகாவை கூப்பிடும் சூர்யா, கணவன் குறிப்பறிந்து காதலாகி கசிந்து உருகும் ஜோதிகா.

அம்பையில் தப்பித் தவறி ஒரு பையன் சைட் கூட அடிக்க முடிக்க முடியாதச் சூழலைக் கண்டு வெறுத்து குந்தவியும் அவள் தோழிகளும் அட்லீஸ்ட் கல்யாணமாவது காதல் கல்யாணமாகப் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுகிறார்கள். இரண்டு தோழிகளும் லோக்கலாக கிடைக்கும் இரண்டு மீசைக்காரர்கள் மேல் ஆசைப்பட்டுக் காதல் கல்யாணம் செய்து கொண்டு விட குந்தவிக்கு மட்டும் பெரியோர்கள் நிச்சயித்த மாப்பிள்ளையோடு திருமணம்.
காதலித்துத்தான் கல்யாணம் என்ற லட்சியம் கலைந்த சோகம், முன் பின் தெரியாதவனொடு எப்படி வாழப் போகிறொம் என்ற கடுப்பு குந்தவிக்கு! தாலி கட்டியவுடன் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டக் காதலி/மனைவி நினைவோடு கௌதம்.

இருவரும் தாம்பத்தியத்தில் இணைகிறார்கள். உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் போல் பழையக் கனவுகளையெல்லாம் மறந்து அந்நியோன்னமாய் வாழ்ந்து அதற்கு அடையாளமாக லட்டு மாதிரி ஒரு குட்டிப் பெண் ஐஸ்வர்யா! இது பழைய காதலியின் பெயர்! நிஜமாகவே சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஒரு குட்டிப் பெண் பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கும் துருதுரு பெண்! தொடரும் ஊடல்கள்! கூடல்கள்! ஜில்லுன்னு ஒரு குடும்ப வாழ்க்கை! சனிக்கிழமை ராத்திரியானால் சூர்யாவுக்காக பார்த்து பார்த்து பணிவிடைசெய்வது, டிரயினில் சூர்யாவைப் பார்த்து காதலாகி உருகும் பெண்ணை சதாய்ப்பது, கணவனின் பழைய காதல் தெரிந்து மருகுவது என்று ஜோதிகாவிற்கு 'நடிகையர் திலகம்' பட்டமே தரலாம். கல்யாணம்! கல்யாணத்திற்கு முன்னால் ஒரு காதல்! திருமணத்திற்குப் பிறகு மனைவி கணவனிடமும் மனைவி கணவனிடமும் பிரியமாக இருப்பதெல்லாம் யதார்த்தமான விஷயங்கள்தான்! பழையக் காதல் பற்றி மனைவிக்கோ
அல்லது கணவனுக்கோ தெரியும் போது மட்டும் இந்த யதார்த்தம் எப்படியோ விடை பெற்றுப்போய் வேண்டாத குழப்பங்கள் வந்து விடும். மீண்டும் அவர்களை வாழ்க்கையில் சந்திக்க நேரும் போது அவர்கள் நல்ல நண்பிகள் அல்லதி நண்பர்கள் என்று நினைக்க முடியும் போது எதற்காக குழப்பம்? நல்ல வேளை இந்தப் படத்தில் அத்தனை நாடகத்தனமான சோகங்கள் இல்லாமல் கணவனின் டயரியில் தாலி கட்டியவுடன் பிரிந்த காதலியை நினைத்து அவளோடு ஒரு நாளாவது வாழ்ந்திருக்கக் கூடாதா என்று புலம்பியிருப்பதைப் படித்து விட்டு அந்தக் காதலியை வரவழைத்து ஒரு நாளாவது வாழ முடியவில்லையே என்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்து விட்டேன். இந்த ஒரு நாள் உங்கள் இருவருக்காக! என்று தன் கணவனின் காதலுக்கு மரியாதை தரும் மனைவி.

தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவன் டைரியில் புலம்பி அழுத பழைய காதலன் இல்லை. குந்தவியின் கணவனாக இருக்கும் கௌதம் மட்டும் தான் எனபதை உணர்ந்துப் பிரியும் காதலி. எல்லாம் சேர்ந்து கவிதையாக்கி இருக்க வேண்டும். ஆனால் சிறுகதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் அழகான சிறுகதை. இறுதிக் காட்சியில் தழதழத்தக் குரலில் சூர்யா பேசுவதைக் கண்ணை மூடிக் கொண்டுக் கேட்டால் சிவகுமார் தான் பேசுகிறாரோ என்ற ஒரு திடுக்கிடல்!
இனிமேல் சூர்யா தழதழத்தக் குரலில் பேசக்கூடாது என்ற சட்டம் போடலாம். சூர்யாவின் நண்பராக வரும் சந்தானம் வரும் போதெல்லாம் கலகலப்பு! ரெஜிஸ்டர் கல்யாணம் செய்யும் முன்பு டீக்கடைக் காட்சி! அந்தக் காட்சியின் இறுக்கத்தை தளர்த்தி விடுகிறது.அடுத்த விவேக்காக முயற்சிக்கலாம். வடிவேலு வருகிறார். போகிறார்.

சித்ரா ரமேஷ்
kjramesh@pacific.net.sg

5 மறுமொழிகள்:

At 8:56 AM, Blogger dondu(#11168674346665545885) said...

பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிக நல்ல முறையில் எழுதப்பட்டிருந்தது. கவித்துவம் நிறைந்த கதைக்கு அதற்கு சற்றும் குறையாத விமரிசனம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

At 1:40 PM, Blogger Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

 

At 4:53 AM, Blogger Inilan said...

நல்ல விமர்சனம்..எனக்கு ரொம்ப பிடித்த திரைப்படம்.
-இனிலன்
http://inilan.blogspot.com/

 

At 6:18 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

At 6:19 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< முகப்பு