பிள்ளையாரும் அவ்வையாரும்

பிள்ளையாரும் அவ்வையாரும்
நேற்று நம்ப பிள்ளையாரைப் பற்றி எழுதியதும் சுண்டல் இல்லையா என்று கேட்டு ஒருவரும் தகவல் களஞ்சியமாக இருக்கிறதே அவ்வையாரில் வரும் பிள்ளையார் யார் என்று ஒருவர் கேட்டிருந்தார். இந்த பிள்ளையார் விஷயமும் அவ்வையார் விஷயமும் நிறைய சர்ச்சைகள் உருவாக்கும் விஷயமாகி விட்டது. சிறுத்தொண்டர் தான் முதலில் வினாயகர் சிலையை வாதாபியிலிருந்து கொண்டு வந்து வழிபட்டார் என்று எழுதியிருந்ததுத் தவறு. சில விஷமிகள் பரப்பும் தவறான கருத்து! மகேந்திர பல்லவன் காலத்திலேயே தொண்டங்கி விட்டது. அப்பர் தன் பதிகத்தில் பாடியிருக்கிறார் என்று ஆதாரப் பூர்வமாக பாடல்களையெல்லம் அனுப்பியிருந்தார். பாடல்களை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம். வினாயகர் என்று வெளிப்படையாக எழுதப் படாததால்! மகேந்திரவர்மன் காலத்திற்கும் அவரது மகன் நரசிம்மப்பல்லவன் காலத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருட கால வித்தியாசம் இருக்குமா? சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்ட பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதிதானே! எனவே பல்லவர் காலத்திலிருந்து வினாயகர் வழிபாடு தொடங்கியது என்று எடுத்துக்கொள்ளலாமா?


அடுத்தது அவ்வையைப் பற்றியது! நம்ப வேற எக்கச்சக்க சினிமாவிலும் செவிவழிக்கதைகளிலும் அவ்வையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.முதல் அவ்வை புராணக் கதைகளில் தென்படும் அவ்வை! இவர் அடிக்கடி கைலாசம் போய் சிவா சிவா என்று வாசித்திருப்பவருக்கு சிவனை ஒன்று இரண்டு மூன்று என்று வகைப் படுத்திப் பாடி முருகனுக்கும் வினாயகருக்கும் ஒரு சின்ன மாம்பழ விஷயத்தில் மனத்தாங்கல் ஏற்படுத்தியவர். நினச்சப்ப •பிளைட் பிடிச்சு கைலாயம் போய் முருகப் பெருமானுக்கு அறிவுரை கூறிய அவ்வை யார்?


இரண்டாமவர் சங்க கால அவ்வை! இவரைப் பற்றித் தெளிவாக ஒரு சித்திரம் இருக்கிறது. தன் இளமை தன்னுடைய புலமைக்குத் தடையாக இருந்ததால் முதுமைப் பருவத்தை இளவயதிலேயே வேண்டி விரும்பிப் பெற்றவர் என்றும் ஒரு கதை இருக்கிறது.இவர் தன்னுடைய கவிதைகளால் எல்லா மன்னர்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருந்தார். முக்கியமாக பாரி மன்னனுக்கும் அதியமானுக்கும் ரொம்ப நெருங்கியத் தோழி! பாரி மன்னன் போரில் இறந்ததும் முழு நிலவைப் பார்த்து பாரியின் பெண்கள் இருவரும் பாடும் ‘அற்றைத் திங்கள்’ பாட்டு அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இது சங்க இலக்கிய மரபில் அமைந்த பாடல். அப்போது அவ்வையும் அவர்களோடு இருந்தார். தன் நெருங்கிய நண்பனின் பெண்களுக்கு உதவி செய்தார். இவர் பாடல்கள் சில சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அவ்ஔவையார்தான் பல சிறந்த எளிமையான அற நூல்கள் எழுதியுள்ளார்.


அடுத்தவர் சங்க காலத்துக்குப் பிந்தியவர். ‘பாலும் தெளிதேனும்’ பாடலை எழுதிய அவ்வை. வினாயகர் அகவல் எழுதியவர். இதைப் பற்றி சில குழப்பங்கள் உள்ளன. அவ்வை என்ற பெயரை பெண்பாற் புலவர்கள் இருவரும் வைத்திருந்தனரா? இல்லை பிற்காலத்தில் வந்த கவிதாயினி ஔவையைப் போல நன்றாகக் கவிதை எழுதியதால் அவருக்கு அவ்வை என்ற பட்டம் கொடுத்தனரா?


ஜெமினி பட நிறுவனத்தினர் எடுத்த அவ்வையார் படம் இப்படி இந்த மூன்று அவ்வையாரையும் கலந்து எடுத்தனர். அவ்வையாரைப் பற்றிய எல்லாக் கதைகளும் வரும். சுட்டப் பழம் வேண்டுமா சுடாதப் பழம் வேண்டுமா என்று முருகன் கேள்வி கேட்டு அவ்வைக்கும் தெரியாத விஷயங்கள் உண்டு என்று தெளிவுப் படுத்தி இறுதியில் கைலாசத்தில் போய் சிவதரிசனத்தில் படம் முடியும். பிறகு ஏபி நாகராஜன் எடுத்த திருவிளையாடலில் வரும் புராண அவ்வை! இதை பற்றி நான் சொல்லவே வேண்டாம். பெரியோர்களாகச் சேர்ந்து நடத்திய நாடகமல்லவா என்று குமரன் கோபித்துக் கொண்டு மலையேற பழம் நீயப்பா என்று நம்ப அவ்வையாரும் போய் புத்திமதிச் சொல்ல.. பார்வதி வந்து உன் அப்பாவுக்கு எப்போதுமே இப்படி விளையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல திருவிளையாடல் துவங்கும். இப்படி சினிமாக்களில் கேபி சுந்தராம்பாளை அவ்வையாகப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட நண்பரொருவர் “முத வாட்டி மாம்பழத்தை கைலாசத்தில் கொண்டு போய் கொடுத்து குழப்பம் பண்ணினாங்க! அப்புறம் இன்னொரு படத்தில் தன் கணவருக்கு வைத்திருந்த மாம்பழத்தை வேறு யாருக்கோ கொடுத்து அதனால் அவங்க கணவர் கோபித்துக் கொண்டுப் போகிறாரே அது என்ன கதை?”, என்று என்னிடம் கேட்க எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவ்வையாருக்கு திருமணம் ஆன கதை எனக்குத் தெரியாதே! என்று விசாரித்துப் பார்த்ததில் அதாங்க சின்ன வயசில் லஷ்மியா இருப்பாங்க வயசான பிறகு கேபிஎஸ்ஸா ஆயிடுவாங்களே அந்தப் படம்தாங்க! என்றார். ஐயகோ! நான் என்ன சொல்வது? இப்படி கேபிஎஸ்ஸை அவ்வையாராகவே மாற்றிய வாசனை ஒரு நிமிடம் உதவிக்குக் கூப்பிட நினைத்தேன். அந்தப் படத்தின் பெயர் காரைக்காலம்மையார். ‘தகதகதகதக என்று ஆடவா’ என்று சிவ பார்வதி நடனத்தைப் பாடியிருப்பார். அப்புறம் பூம்புகாரில் கவுந்தியடிகளாக வேறு வருவார். நல்ல வேளை அந்தப் படத்தை இன்னும் அந்த நண்பர் பார்க்கவில்லை! இல்லையென்றால் சிலப்பதிகாரத்தில் கூட கோவலனுக்கும் கண்ணகிக்கும் ரொம்ப உதவி செய்தாங்களே அவ்வையார் என்று குழப்பிவிட்டுருப்பார்.


கவிஞர் இன்குலாப் அவ்வையாரைப் பற்றி ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். இதுவும் பெரும் சர்ச்சைக்குள்ளானது! ஏன்? அவ்வை தன் நண்பனான பாரியுடன் சேர்ந்து கள் அருந்துவதாக எழுதியிருப்பார். அப்புறம் பாலகுமாரன் முதிர்கன்னி என்று அவ்வையாரை கதாநாயகியாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவ்வை விறலியர் கூட்டத்தோடு சேர்ந்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்ததாக எழுதியிருப்பார்.எது எப்படியிருந்தாலும் நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் தந்த அவ்வையை ஒரு கண்ணியமும்நேர்மையும் கொண்ட தமிழ் மூதாட்டியாகக் கொண்ட மனப்பிம்பம் மாறப் போவதில்லை.
பெண்கள் எதை எதையோ புரட்சிப் புதுமை என்றெல்லாம் இன்று பேசுகிறார்களே! எந்தப் புதுமைப் பெண்ணுக்கும் இல்லாத ஒரு துணிச்சல் அன்று இருந்த அவ்வைக்கும் காரைக்காலம்மையாருக்கும் இருந்தது. ஒருவர் தன் இளமையே வேண்டாமென்று முதுமைக் கோலத்தை ஏற்றுக் கொண்டார். இன்னொருவர் இறையனுபவத்தைப் பெறப் பேயுரு கொண்டு கைலாசத்திற்குச் சென்றார்.இதைப் போல பெண்களின் புற அழகை மறுத்து அக அழகை மட்டும் பெரிதாக நினைக்கும் ஆண்கள் வேண்டாம்! பெண்களே யாராவது இருக்கிறார்களா?

5 மறுமொழிகள்:

At 10:42 PM, Anonymous Anonymous said...

Please read this Tevaram verse again: http://www.tamil.net/projectmadurai/pub/pm0181/tevaram4a.html#dt4002

Saint Appar sings 'Ganapathi ennum kaLiRu' clearly. Now, if you have problem in interpreting Ganapathi as Vinayakar, I can't help. So be it. He is known in 15 other names popularly.

All your other doubts are dealt in the 'Vinayahar Ahaval urai' that I had posted in some yahoo groups recently. Shall let you know the URL, once that is uploaded in full, in a website.

Regards,
Kumar
Java

 

At 11:25 PM, Blogger -/பெயரிலி. said...

நீங்கள் சொல்லும் அவ்வையின் குழப்பம் சரியானது. (ஆனால், நேற்றைக்கிரவு பார்த்த திருவிளையாடலுக்காக சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் பாடும் கிட்டப்பா பொண்டாட்டி சுந்தராம்பாள் அவ்வையின் குரலுக்காக இந்தக்குழப்பங்களை மன்னிக்கலாமெனத் தோன்றியது)

ஆனால், இட்டபெயராக இல்லாமல், பொதுப்பெயராக 'ஔஅவ்வை' என்பதின் அர்த்தமென்ன என்று கவனியுங்கள்.

1. mother; 2. old woman; 3. woman ascetic; 4. name of a famous poetess

வாதாபி_பிள்ளையார் புகுந்ததையாவது தாங்கிக்கொள்ளலாம்; மும்பாய்_கணேஷ் கடலுக்குக் களங்கம். ;-)

 

At 1:12 AM, Anonymous Anonymous said...

Ramani,

Vinayaka was not brought in by Pallavas at all.

Kalabra interregnum (of nearly three centuries) comes to an end in Northern TN, only during Mahendra Varman's period. Saint Appar sings about Ganapathi, even before MV coming back to Saivam. Hope this helps.

How are you btw?

Rgds,
Kumar

 

At 4:06 AM, Blogger துளசி கோபால் said...

என்னங்க சித்ரா,

இவ்வளவு சொல்லிட்டு நம்ம'அவ்வை ஷண்முகி'யை வுட்டுட்டீங்களே:-)))


அடிக்கவராதீங்க.....

சரி. விஷயத்துக்கு வரேன்.
புள்ளையார் பல்லவர் காலத்துலேதான் வந்தார்னு சொல்றதுலே சந்தேகம் ஒண்ணும் இல்லையே?

 

At 8:43 AM, Anonymous Anonymous said...

Looking for information and found it at this great site... hot tub dealers Voice over ip web.de Marietta kitchen counter tops Cosmetic dentists frederick md

 

Post a Comment

<< முகப்பு